Current Affairs May 25-27




சண்முகம் ஐ.ஏ.எஸ்  அகாடமி 
நடப்பு நிகழ்வுகள் 
  1. புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஸ்வச்ச் பாரத் அப்பிளிகேஷனை  கலாசார அமைச்சர் மகேஷ் ஷர்மா அறிமுகப்படுத்தியுள்ளார்.
  2. பிரஸ்ஸல்ஸில் நேட்டோ உச்சி மாநாடு தொடங்கியது .
  3. ஹவுரா மற்றும் கொல்கத்தாவை இணைக்க ஹூக்ளி ஆற்றின் கீழ் இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது .
  4. ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் காலமானார் .
  5. Airlander 10, உலகின் மிகப்பெரிய விமானம் வெற்றிகரமாக சோதனையை முடித்துவிட்டது
  6. ஐ.ஐ.டி காரக்பூர் மற்றும் மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் \'ராஜ்ய ஆனந்தம் சன்ஸ்தான்\' (மகிழ்ச்சித் துறை) இருவரும் இணைந்து மாநிலத்தின் வசிப்பவர்களின் நல்வாழ்வை அளவிடுவதற்காக மகிழ்ச்சி குறியீட்டினை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
  7. உலகின் மிகச் சிறிய குடியேற்ற நாடான நவ்ரூ தீவு சர்வதேச சூரிய கூட்டணிக்கு (International Solar Alliance) க்கு ஒப்புதல் அளித்த ஆறாவது நாடு.
  8. சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஹாலியன்லால் குட் கடவுள் பற்றிய தத்துவ நூல் வெளியிட்டார் “Confessions of a dying mind: the blind faith of atheism“\"இறந்து கொண்டிருக்கும் மனதின் ஒப்புதல்: நாத்திகத்தின் குருட்டு நம்பிக்கை\". இது உலகின் முதல் கடவுள் தத்துவ நாவலாகும்.
  9. ஹார்ஷ் மல்ஹோத்ரா கமிட்டி சாரணர்கள் மற்றும் அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் பற்றிய அறிக்கையை விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.
  10. பங்களாதேஷ் தலைநகர் டாக்கா, உலகிலேயே மிகவும் நெரிசலான நகரம். இதனை தொடர்ந்து இந்திய நகரமான மும்பை இரண்டாமிடமும் , கோட்டா ஏழாமிடத்திலும் உள்ளது .
  11. துபாய் முதல் ரோபோ போலீஸ் அதிகாரிகளை அறிமுகப்படுத்தியது
  12. சஞ்சய் மித்ரா புதிய பாதுகாப்பு செயலாளராக பொறுபேற்றார்
  13. பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் மிக நீண்ட நதி பாலமான அசாமில் உள்ள டோலா - சடியா பிரிட்ஜ் ஐ திறந்து வைத்தார்.
  14. அசாம், கமருப்பில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  15. மொரிஷியஸ் பிரதம மந்திரி, பிரவீன் குமார் ஜுகுநாத் இந்தியா வந்துள்ளார் . உலக பட்டினி பட்டியலில் 118 நாடுகளில் இந்தியா 97 வது இடத்தில் உள்ளது,
  16. இந்திய அமெரிக்க நீதிபதி அமுல் தாபார் அமெரிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு பதவி வகிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது .
  17. அனுராக் திரிபாதி சிபிஎஸ்இ செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்
  18. டோலா-சடியா பிரிட்ஜ் என்பது பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான லோஹீத் ஆற்றின் மீது 9.15 கி.மீ. நீளமுள்ள ஒரு பாலமாகும்
  19. மணிப்பூரில் போர் அருங்காட்சியகம் கட்ட ஜப்பான் முடிவு செய்துள்ளது .
  20. வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தை அகற்றுவதாக அரசு முடிவு செய்துள்ளது
  21. ஐஸ் ஹாக்கி உலக கோப்பையை சுவீடன் வென்றது
  22. பிரதமர் நரேந்திர மோடி வானொலி ஒலிபரப்பு திட்டம் Mann ki Baat இப்போது புத்தக வடிவத்தில் வெளிவந்துள்ளது
  23. உலக அடையாளங்களுள் முதல் 10 இடங்களில் 5 வது இடம் - தாஜ்மஹால்
  24. உலகில் அதிகஅளவு FDI பெரும் நாடு இந்தியா , இரண்டாமிடம் சீனா
  25. உலகின் முதல் 10 நுகர்வோர் நிதி சேவை நிறுவனங்களில் எச்.டி.எஃப்.சி இடம்பெறுகிறது .
  26.  நாடு முழுதும் இறைச்சிக்காக மாடுகள், காளை, எருமை, பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  27.  இந்தியாவின் முதல் வெற்றிகரமான ஸ்கார்ப்பீயன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து டார்ப்பெடோ வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  28.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொந்த மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணையின் வருமானங்களையும் போட்டியிடுவதற்கு முன்னர் வாக்குமூலத்தில் அறிவிக்க வேண்டும்
  29. பிரதமர் நரேந்திர மோடி அசாமில் உள்ள கோகமுக்கில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார் . இதற்கு முன்னர் டெல்லி மற்றும் ராஞ்சியில் உள்ளது
  30.  நாசாவின் ஜுனோ விண்கலம் பூமி அளவிலான சூறாவளிகள் வியாழன் துருவங்களில் கண்டுபிடித்துள்ளது .
மேலும் படிக்க http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/



















Comments